Monday, 30 August 2010

வளிமண்டலம்....

பூமிக்கு வெளியே, பூமியைச்சுற்றி உள்ள காற்றுமண்டலத்தில் காற்றடைத்த பலூன் ஒன்றை மிதக்கவிட்டோமானால், அது உடையாமல் இருப்பின் மீண்டும் அது தொடங்கிய இடத்திற்கே வந்துசேர ஒருவாரம் ஆகும்...

நான்கு இதயங்கள்...

ஆக்டோபஸிற்கு நான்கு இதயம் உள்ளது.

"ஒட்டக" உதை...

*ஒட்டகம் ஓங்கி ஒரு உதை உதைத்தால் மனிதனின் மண்டை ஓடுகூட உடைந்துவிடும்...

*ஒட்டகத்தின் பால் கறந்தவுடன் உறைந்துவிடும்...

*ஒட்டகச்சிவிங்கியின் ஒரு உதையில் வலிமைகொண்ட சிங்கமகூட இறந்துவிடும்....

யானையின் பிரசவ காலம்...

யானை ஒரு குட்டியைப் பிரசவிக்க ஆகும் காலம் 22 மாதங்கள்...

கடற்குதிரை...

கடல் வாழ் உயிரிகளான கடற்குதிரைகளில் ஆண் கடற்குதிரைகள்தான் குட்டிகளைப் பிரசவிக்கிறது....

முட்டைபோடும் பாலூட்டி...

விலங்கினங்களிலேயே எறும்புதின்னி மட்டுமே முட்டையிட்டு பாலூட்டுகிறது...

Sunday, 29 August 2010

ஆங்கில வார்த்தையின் எழுத்துக்கள்...

"THE QUICK BROWN FOX JUMPS OVER THE LAZY DOG"
என்ற ஆங்கில வார்த்தையில் ஆங்கில எழுத்துக்கள் அணைத்தும் அடங்கும்..

எலித் தகவல்....

எலி தனது முன் பற்களைக் கொண்டு பொருட்களைக் கொறித்து தனது பற்களின் வளர்ச்சியைத் தடைசெய்கிறது...அவ்வாறு எலி செய்யவில்லை யாயின் எலியின் முன் பற்கள் ஒரு மீட்டர் நீளம்வரை வளர்ந்துவிடும். எனவேதான் எலி வீட்டுப்பொருட்களைக் கொறித்து சேதம் செய்கிறது....

மோப்ப நாய்...

கேட்கும்திறன் குறைபாடுள்ள நாய்கள் அதிக மோப்ப சக்தி கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது...

உருஞ்சும் புறா....

பறவைகளில் புறா மட்டுமே நீரை உருஞ்சிக்குடிக்கும் தன்மைகொண்டது....

செத்தாலும் வளரும்...

நாம் இறந்த பின்னும் நமது கை,கால் நகங்கள் மற்றும் தலைமுடி ஆகியவை சுமார் ஒரு வாரம் வரை வளர்கிறது....

அதிக முட்டையிடும் கரையான்...

உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரி கரையான்.ஒரு நொடிக்கு ஒரு முட்டையிடும்...

சிலந்தியைப் பற்றி சில விசித்திரத் தகவல்கள்...

*சில வகை சிலந்திகள் தனது தாகத்தை தீர்த்துக்கொள்ள தனது வலையையே உட்கொள்ளுகின்றன...

*பெண் சிலந்திகள் இனப்பெருக்கத்திற்குப் பிறகு ஆண் சிலந்தியைக் கொன்றுவிடுகின்றன...

*நூறு கிராம் அளவிற்கு சிலந்தியிடமிருந்து அதன் வலையை எடுத்தோமானால், அந்த நூறுகிராம் வலையைக்கொண்டு முழு பூமியையும் சுற்றிவிட முடியும்....

நீநீநீநீநீளமான நதி...

உலகின் மிக நீளமான நதி அமேசான் ஆறுதான்.உலகில் உள்ள அனைத்து நீளமான நதிகளையும் இணைத்தாலும் அமேசான் ஆறின் நீளத்திற்கு வராது...

Saturday, 28 August 2010

சுறா செய்தி....

சுறாவால் மற்ற மீன்களைப்போல் நீரில் அந்தரத்தில் நிற்க இயலாது...ஏனெனில் சுறாவின் உடல் நீரின் அடர்த்தியை விட அதிக அடர்த்தி கொண்டது.எனவே நீரில் நிற்க முயன்றால் நீரில் மூழ்கி விடும்...

முதலை செய்தி....

முதலையால் தனது நாவை அசைக்க முடியாது....

சுழலும் பூமியைப் பற்றி ஒரு சுவையான செயதி...

பூமி தான் சுழலும் வேகத்தில் ஒரு நொடியில் நூறில் ஒரு பங்கு குறைந்தாலும், பூமியில் உள்ள காற்று அணைத்தும் வெளியேறிவிடும்....

(வாரப் பத்திரிக்கை ஒன்றில் கவிப்பேரரசு.வைரமுத்து அவர்கள் சொன்னது..)

எறும்பு பற்றி துரும்புச் செய்தி...

எறும்பால் தனது எடையைப்போல் ஐம்பது மடங்கு எடையை அசாதாரணமாக தூக்கிச்செல்ல முடியும்...